Latest Posts

Thursday, 11 March 2010

மீண்டும் லக லக லக லக லக லக லக்........


ஆப்த்மித்திரா என்ற கன்னடப் படத்தின் மீள்தயாரிப்பான சந்திரமுகி தமிழில் சக்கை போடு போட்டது. இப்போது ஆப்த்மித்திராவிம் பாகம் 2 வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜனிகாந் இப்படத்தை பார்த்து வெகுவாகப் புகழ்ந்ததைத் தொடர்ந்து தமிழில் சந்திரமுகி-2 என்ற பெயரில் மீள்தயாரிப்பு செய்ய பி வாசு முடிவெடுத்திருக்கிறார். ரஜனி இதில் நடிப்பாரா என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ஏங்கண்ணு, நம்ம தமிழ்ப்படம் நடித்த சிவா தம்பியை கேட்டா என்னா?


http://www.tamillook.com/display.aspx?id=11a29b40-2afb-419b-ba4a-c7d488a180e4
read more...

இந்திராகாந்தி படத்தில் சினேகா


 பிரதமர் இந்திராகாந்தியின் சரிதத்தை அவர் பெயரிலேயே ஹாலீவூட்டின் டேவிட் பினி படமாக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பிரியங்கா சோப்பிரா இந்திராவாக நடிக்கும் இப்ப்டத்தில் சினேகாவை மேனகா காந்தியாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது!
சினேகாவுக்கு மீண்டும் ஒரு சிரிக்காத படமா?... மனது தாங்காதுங்க !


http://www.tamillook.com/display.aspx?id=e1c9910d-d9ca-4b20-a554-7e7bcaab8d86
read more...

தள்ளிப்போகுமா எந்திரன் வெளியீடு?


பிரமாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பான எந்த்ரன் பட வேலைகள் முடிவடைந்து கொண்டிருக்கும் நிலையில் ஐஸ்வர்யாரயின் கால்ஷீட் குளறுபடிகளால் படம் தாமதம் ஆகும் என்கிறார்கள்.
மணிரத்தினத்தின் ராவண் படவேலைகளில் ஐஸ்வர்யாராய் பிஸியாக இருப்பதால் எந்திரன் படப்பிடிப்புக்கு சொன்னபடி வருவதில்லை என்று அறியக்கிடைக்கிறது.
ஜூலையில் வெளியீடு செய்யப்பட வேண்டிய எந்திரன் தீபாவலிக்கு தள்ளிப் போகலாமாம்.
கவனம் திருமதி பச்சன்...தமிழர்கள் தள்ளிவைத்து விடுவார்கள்!
read more...

இலங்கை - ஐக்கிய ராட்சிய உறவில் விரிசல்?


 இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் மில்லிபாண்ட் உலகத்தமிழர் பேரவையின் மாநாட்டில் உரையாற்றியது சிங்கள் பேரினவாதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் தலையிடியாய் அமைந்தது. பல ஆர்ப்பாட்டங்களும் மதிப்புக்குரிய இங்கிலாந்து பிரதமர் கோல்டன் பிறவுணையும் அமைச்சர் மில்லிபாண்ட் அவர்களையும் புலிகளாகச் சித்தரித்து பதாகைகள் தாங்கிய கூத்தும் அறிந்திருப்பீர்கள்.இலங்கை கடும் கண்டனத்தை வெளியிட்டதுடன் கொழும் பில் உள்ள பிரிட்டிஷ் தூதரை நேரில் அழைத்து ஆட்சேபத்தை தெரிவித்திருந் தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் ஐக்கிய ராட்சியத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இவ் முரண்பாபாடு தொடர்பாக விளக்க இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சரின் உதவிச் செயலர் சேர்.பீற்றர் றிச்சட்ஸ் கொழும்பு வந்த்திருக்கிறார்.

http://www.tamillook.com/display.aspx?id=8c5c4112-99fd-4123-8bf2-8b2ec9e5744c
read more...

தமிழர்கள் எந்த அணி?


எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு திரட்ட அவரின் புதல்வர் நாமல் நேற்று யாழ்ப்பாணம் போயிருக்கிறார். சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட புதிராக களத்தில் குதித்துள்ள யாழ் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் யோகராஜனின் ஏற்பாட்டிலேயே இவர் யாழ் சென்றிருப்பதாக அறியக்கிடைக்கிறது. நீலப்படை அணி என்று ஒரு தொண்டர் படையும் அவருடன் சென்றிருந்தனர்
தொழில்நுட்பக் கல்லூரி மாணவைகளை அரசியல் இலாபத்திற்காக பாவிக்க முற்படுவதாக மாணவர் ஒன்றியம் கடும் விசனத்தை தெரிவித்திருக்கின்ற அதே வேளை இளைஞர்களின் வாககுகளைக் கைப்பற்றவே இக் கூத்துகள் யாழ் களத்தில் அரங்கேறுகின்றன.

http://www.tamillook.com/display.aspx?id=184666c0-7cf8-45b1-8354-dfde64329933
read more...

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க சீனா உதவி...


 இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு அரைவாசிக்கு மேற்பட்ட நிதியை சீனா வழங்கியிருப்பதாகவௌம் தெரிய வருகிறது. இதற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனா கடனாக இலங்கைக்கு கொடுத்திருக்கிறது.
அம்பாந்தோட்டையில் ஏலவே சீனாவின் பெருந்தொகைக் கடன் உதவியோடு ஒரு துறைமுகம் கட்டப்பட்டு வருவது அறிந்திருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு கட்டுமானப்பணிகளும் சீனாவின் கட்டுமான கம்பனிகளுக்ககே வழங்கப்பட்டிருக்கின்றன. அன்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே பெருமளவு வேலைகளுக்கு அமர்த்தப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது.
இதுதவிர 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை ரயில்வே திணைக்களத்துக்கு கடனுதவி செய்யவும் சீனா இணங்கியிருக்கிறது.
மேற்படி விடையங்கள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீள் வைத்திருக்க விரும்பும் இந்திய அரசாங்கத்திற்கு பெரிய தலையிடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

http://www.tamillook.com/display.aspx?id=66f8215e-dfb7-4e8b-be85-21a7fd7f9fce
read more...

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஒழிக்க முயல்கிறது...


 இராணுவ ரீதியாக புலிகளை அழித்த இலங்கை அரசாங்கம் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அழித்தொழிக்க முயல்வதாக அவ் அமைப்பின் முக்கியஸ்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
வடமாராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கில் மிக அதிகமான சுயேட்சைக் குளுக்களை நிறுத்தி தமிழர் வாககுகளைப் பிரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஒரே உரிமைக் குரலாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு கபடத்தனமாகச் செயற்பட்டு வருவதாக விசனம் தெரிவித்தார்.

http://www.tamillook.com/display.aspx?id=6f84c770-bbfb-4ca9-be7b-5d81a183fb03
read more...

சரத்பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் வருகின்ற கிழமை நடைபெறுகிறது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூன்று இராணுவ நீதிமன்ற நீதிபதிகளால் வருகினற 16, 17ம் திகதிகளில்  சரத்பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் நடைபெறவுள்ளன



read more...

Sunday, 7 March 2010

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் வெளிநாடு பயணம்




தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்களின் பயண ஒழுங்குகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமாகிய திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திரு.சிவாஜிலிங்கம் அவர்களால் கடந்த 2ம் திகதி திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக  கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்ரன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சுகயீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அத்தோடு அவரின் பிள்ளைகள் இந்தியா, டென்மார்க் மற்றும் கனடாவில் வசிப்பதாலும் அவர் இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளார்.

read more...

Friday, 5 March 2010

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கையில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 25 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மனித உரிமை நிலைமைகள் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகள் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamillook.com/display.aspx?id=9fde7d73-f7ee-4d6f-b8a5-db4897bebcc1
read more...