Friday, 5 March 2010

அவுஸ்ரேலியாவிற்கு செல்லவிருந்த 21 பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது!

 சிறீலங்கா காவல்துறையினர் 21 பேரை அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்டார்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக  தெரிவித்தள்ளனர்.
 
இவர்கள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.  இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா பணத்தை  சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நபர்களிடம் செலுத்தியுள்ளனர். 
 
கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்களே சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அவுஸ்ரேலியாவிற்கு செல்லவிருந்த 21 பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது!"

Post a Comment