Thursday, 11 March 2010

மீண்டும் லக லக லக லக லக லக லக்........


ஆப்த்மித்திரா என்ற கன்னடப் படத்தின் மீள்தயாரிப்பான சந்திரமுகி தமிழில் சக்கை போடு போட்டது. இப்போது ஆப்த்மித்திராவிம் பாகம் 2 வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரஜனிகாந் இப்படத்தை பார்த்து வெகுவாகப் புகழ்ந்ததைத் தொடர்ந்து தமிழில் சந்திரமுகி-2 என்ற பெயரில் மீள்தயாரிப்பு செய்ய பி வாசு முடிவெடுத்திருக்கிறார். ரஜனி இதில் நடிப்பாரா என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ஏங்கண்ணு, நம்ம தமிழ்ப்படம் நடித்த சிவா தம்பியை கேட்டா என்னா?


http://www.tamillook.com/display.aspx?id=11a29b40-2afb-419b-ba4a-c7d488a180e4
read more...

இந்திராகாந்தி படத்தில் சினேகா


 பிரதமர் இந்திராகாந்தியின் சரிதத்தை அவர் பெயரிலேயே ஹாலீவூட்டின் டேவிட் பினி படமாக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பிரியங்கா சோப்பிரா இந்திராவாக நடிக்கும் இப்ப்டத்தில் சினேகாவை மேனகா காந்தியாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது!
சினேகாவுக்கு மீண்டும் ஒரு சிரிக்காத படமா?... மனது தாங்காதுங்க !


http://www.tamillook.com/display.aspx?id=e1c9910d-d9ca-4b20-a554-7e7bcaab8d86
read more...

தள்ளிப்போகுமா எந்திரன் வெளியீடு?


பிரமாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பான எந்த்ரன் பட வேலைகள் முடிவடைந்து கொண்டிருக்கும் நிலையில் ஐஸ்வர்யாரயின் கால்ஷீட் குளறுபடிகளால் படம் தாமதம் ஆகும் என்கிறார்கள்.
மணிரத்தினத்தின் ராவண் படவேலைகளில் ஐஸ்வர்யாராய் பிஸியாக இருப்பதால் எந்திரன் படப்பிடிப்புக்கு சொன்னபடி வருவதில்லை என்று அறியக்கிடைக்கிறது.
ஜூலையில் வெளியீடு செய்யப்பட வேண்டிய எந்திரன் தீபாவலிக்கு தள்ளிப் போகலாமாம்.
கவனம் திருமதி பச்சன்...தமிழர்கள் தள்ளிவைத்து விடுவார்கள்!
read more...

இலங்கை - ஐக்கிய ராட்சிய உறவில் விரிசல்?


 இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் மில்லிபாண்ட் உலகத்தமிழர் பேரவையின் மாநாட்டில் உரையாற்றியது சிங்கள் பேரினவாதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் பெரும் தலையிடியாய் அமைந்தது. பல ஆர்ப்பாட்டங்களும் மதிப்புக்குரிய இங்கிலாந்து பிரதமர் கோல்டன் பிறவுணையும் அமைச்சர் மில்லிபாண்ட் அவர்களையும் புலிகளாகச் சித்தரித்து பதாகைகள் தாங்கிய கூத்தும் அறிந்திருப்பீர்கள்.இலங்கை கடும் கண்டனத்தை வெளியிட்டதுடன் கொழும் பில் உள்ள பிரிட்டிஷ் தூதரை நேரில் அழைத்து ஆட்சேபத்தை தெரிவித்திருந் தமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் ஐக்கிய ராட்சியத்திற்கும் ஏற்பட்டிருக்கும் இவ் முரண்பாபாடு தொடர்பாக விளக்க இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சரின் உதவிச் செயலர் சேர்.பீற்றர் றிச்சட்ஸ் கொழும்பு வந்த்திருக்கிறார்.

http://www.tamillook.com/display.aspx?id=8c5c4112-99fd-4123-8bf2-8b2ec9e5744c
read more...

தமிழர்கள் எந்த அணி?


எதிர்வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு திரட்ட அவரின் புதல்வர் நாமல் நேற்று யாழ்ப்பாணம் போயிருக்கிறார். சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட புதிராக களத்தில் குதித்துள்ள யாழ் தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் யோகராஜனின் ஏற்பாட்டிலேயே இவர் யாழ் சென்றிருப்பதாக அறியக்கிடைக்கிறது. நீலப்படை அணி என்று ஒரு தொண்டர் படையும் அவருடன் சென்றிருந்தனர்
தொழில்நுட்பக் கல்லூரி மாணவைகளை அரசியல் இலாபத்திற்காக பாவிக்க முற்படுவதாக மாணவர் ஒன்றியம் கடும் விசனத்தை தெரிவித்திருக்கின்ற அதே வேளை இளைஞர்களின் வாககுகளைக் கைப்பற்றவே இக் கூத்துகள் யாழ் களத்தில் அரங்கேறுகின்றன.

http://www.tamillook.com/display.aspx?id=184666c0-7cf8-45b1-8354-dfde64329933
read more...

இலங்கையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க சீனா உதவி...


 இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு அரைவாசிக்கு மேற்பட்ட நிதியை சீனா வழங்கியிருப்பதாகவௌம் தெரிய வருகிறது. இதற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை சீனா கடனாக இலங்கைக்கு கொடுத்திருக்கிறது.
அம்பாந்தோட்டையில் ஏலவே சீனாவின் பெருந்தொகைக் கடன் உதவியோடு ஒரு துறைமுகம் கட்டப்பட்டு வருவது அறிந்திருப்பீர்கள். மேலே குறிப்பிட்ட இரண்டு கட்டுமானப்பணிகளும் சீனாவின் கட்டுமான கம்பனிகளுக்ககே வழங்கப்பட்டிருக்கின்றன. அன்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களே பெருமளவு வேலைகளுக்கு அமர்த்தப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது.
இதுதவிர 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையை ரயில்வே திணைக்களத்துக்கு கடனுதவி செய்யவும் சீனா இணங்கியிருக்கிறது.
மேற்படி விடையங்கள் இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீள் வைத்திருக்க விரும்பும் இந்திய அரசாங்கத்திற்கு பெரிய தலையிடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

http://www.tamillook.com/display.aspx?id=66f8215e-dfb7-4e8b-be85-21a7fd7f9fce
read more...

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் ஒழிக்க முயல்கிறது...


 இராணுவ ரீதியாக புலிகளை அழித்த இலங்கை அரசாங்கம் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அழித்தொழிக்க முயல்வதாக அவ் அமைப்பின் முக்கியஸ்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
வடமாராட்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கில் மிக அதிகமான சுயேட்சைக் குளுக்களை நிறுத்தி தமிழர் வாககுகளைப் பிரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஒரே உரிமைக் குரலாகச் செயற்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு கபடத்தனமாகச் செயற்பட்டு வருவதாக விசனம் தெரிவித்தார்.

http://www.tamillook.com/display.aspx?id=6f84c770-bbfb-4ca9-be7b-5d81a183fb03
read more...

சரத்பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் வருகின்ற கிழமை நடைபெறுகிறது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூன்று இராணுவ நீதிமன்ற நீதிபதிகளால் வருகினற 16, 17ம் திகதிகளில்  சரத்பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகள் நடைபெறவுள்ளன



read more...

Sunday, 7 March 2010

தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் வெளிநாடு பயணம்




தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று, கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு பயணமாகியுள்ளார். திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்களின் பயண ஒழுங்குகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமாகிய திரு. சிவாஜிலிங்கம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திரு.சிவாஜிலிங்கம் அவர்களால் கடந்த 2ம் திகதி திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக  கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்ரன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். சுகயீனம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், அத்தோடு அவரின் பிள்ளைகள் இந்தியா, டென்மார்க் மற்றும் கனடாவில் வசிப்பதாலும் அவர் இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளார்.

read more...

Friday, 5 March 2010

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து


ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கையில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஜெனீவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 25 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மனித உரிமை நிலைமைகள் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகள் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamillook.com/display.aspx?id=9fde7d73-f7ee-4d6f-b8a5-db4897bebcc1
read more...

புலம்பெயர் தமிழர் போராட்டங்களால் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி!

புலம்பெயர் தமிழர் போராட்டங்களால்  இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியானது,  பாதிக்கப்பட்டுள்ளது என்று சிங்கள இணைய தளம் ஒன்று கூறியுள்ளது.
350  ஆடை தொழிற்சாலைகள் இலங்கையில் இயங்குகின்றன. மூன்று இலட்சம் தொழிலாளர்கள் இந்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றார்கள்.
2008 ஆம் ஆண்டு நான்காயிரம்  கோடி ரூபாவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டது. இருப்பினும் இவ் ஆண்டு இந்த அளவை எட்ட முடியாது என கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் பூட்சிய வரி சலுகையினை நிறுத்தியுள்ளமை, அமெரிக்காவில் புலம்பெயர் மக்கள் நடத்தும் இலங்கை ஆடை  கொள்வனவு செய்வதனை புறக்கணிக்கும்  போராட்டம், பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டங்களை என்பனவே இதன் பின்னடைவுக்கான காரணங்கள் ஆகும்.
இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ,அமெரிக்க சந்தைகளை இழந்து கொண்டிருக்கின்றது.  இதற்கான  இன்னொரு முக்கிய காரணம்  இலங்கை அரசாங்கம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது என்ற உலகளாவிய பிரச்சாரமும் குற்ற சாட்டும் ஆகும்.
இலங்கை ஆடைகளின் ஏற்றுமதியில் 50 விழுக்காடு ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகள் உள்வாங்குகின்றன. உடனடியாக  வேறு இடங்களில் இவ் 50விழுக்காடு  ஏற்றுமதிக்கான சந்தைகளை பெற்றுக்கொள்ள முடியாது. ஆசியாவில் அரசாங்கம் பெற முடியும் என நம்புவது, பிரச்சாரம் செய்வது போலியானது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamillook.com/display.aspx?id=e4319dcb-9e9e-41a1-a87a-77b003356277
read more...

தமிழகத்தில் ஈழ அகதிகள் காணமற்போகின்றனர் !

தமிழகத்தில் காணமற் போகும் ஈழ அகதிகள், போர்க்குற்றச் சாட்சியங்களை மறைக்கும் முயற்சியா? இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் ஈழ அகதிகள்,சிலர் காணமற் போயுள்ளதாகத் தெரியவருகிறது. வன்னியில் இடம் பெற்ற இறுதியுத்தத்தில் உயிர்தப்பி,தஞ்சமடைந்துள்ளவர்கள் ஈழ அகதிகள், தமிழகத்தில் அகதிகள் முகாமிலிருந்தே மர்மமான முறையில் காணமல் போயுள்ளனர்.



இந்தியாவுக்கு வன்னியிலிருந்து தப்பிச் சென்று, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்திருந்து வைத்தியர் ஒருவர் அண்மையில் இவ்வாறு மர்மமான முறையில் காணமற் போயுள்ளார். இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல விவரங்கள் இவருக்கு தெரிந்திருந்தது, இதன் காரணமாகவே இவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சாட்சியங்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுவருவதாகவும்,
இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ் அமைப்புக்கள் இந்தியாவுக்குச் சென்று, அங்கு தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளின் சாட்சிகளை
பெற்றுவருவதாகவும் சந்தேகித்து, இந்தியப் புலனாய்வுத் துறையினரே இத்தகைய இரகசியக் கடத்தல்களை செய்து வருவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்துக்கு சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் செல்லுமானால், அதில் இந்திய படைகளின் நடவடிக்கைகளும் அம்பலமாகும்! என்ற பயத்தின் காரணமாக அத்தகைய போர்க்குற்றச் சாட்சியங்களை வழங்கக் கூடிய மக்களை இரகசியமாக இந்திய உளவுத்துறை கடத்தி வருவதாகவும் தெரியவருகின்றது.

இத்தகவல்கள் எதுவும் உறுதியாகத் தெரிவிக்கப்படாத பட்சத்திலும், இதற்கான சாத்தியங்கள் உள்ளதை மறுப்பதற்கில்லை என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamillook.com/display.aspx?id=60584e7e-3d9b-4486-b1e7-fa14312d3d69
read more...

அவுஸ்ரேலியாவிற்கு செல்லவிருந்த 21 பேர் சிறீலங்கா காவல்துறையினரால் கைது!

 சிறீலங்கா காவல்துறையினர் 21 பேரை அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்டார்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளதாக  தெரிவித்தள்ளனர்.
 
இவர்கள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தபோதே கைது செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.  இவர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா பணத்தை  சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நபர்களிடம் செலுத்தியுள்ளனர். 
 
கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்களே சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.


read more...

Wednesday, 3 March 2010

100 இளைஞர்கள் பூஸாவுக்கு மாற்றம் !


100 இளைஞர்கள் நெளுக்குளம் தடுப்பு முகாமிலிருந்து பூஸாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்களை மனித உரிமை அலுவலகத்தில்
பார்வையிடலாம்.
 
வவுனியா நெளுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரி தடுப்பு முகாமில் இருந்து இவர்கள் மேலதிக விசாரணைக்காக பூஸா தடுப்பு முகாமிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில்,   100 பேர்    பூஸா தடுப்பு முகாமிற்கு கடந்த 26ஆம் திகதி  அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு: கிளிநொச்சி35, யாழ்ப்பாணம்26, முல்லைத்தீவு13, வவுனியா15, மன்னார்07, மட்டக்களப்பு03, திருகோணமலை01.
 
இவ்வாறு பூஸா தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டவர்களின் விவரங்களை இன்று புதன் கிழமை முதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்.அலுவலகத்தில் பார்வையிடலாம் என்று இணைப்பதிகாரி த.கனக ராஜ் தெரிவித்தார்
 
இதேவேளை வவுனியா செட்டிகுளம் தடுப்பு முகாமில் இருந்து பூஸா முகாமிற்கு மாற்றப்பட்ட 104 பெண்களின் விவரங்களும் இங்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

read more...

அவுஸ்திரேலியாவில் இலங்கை-இந்திய தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!




அவுஸ்திரேலியாவில் இந்திய-இலங்கைத் தம்பதி மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அவர்களது வீடும் சூறையாடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வைத்து இலங்கையர் ஒருவரும் அவரது இந்திய மனைவியும் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
மெல்போர்னில் காரம்ஸ் டவுன் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் அகல்யா என்ற இந்தியப் பெண்ணையும் இலங்கையைச் சேர்ந்த அவரது கணவர் ரஞ்சித் சகஸ்ரநாமமும் இத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். குடிபோதையில் இருந்த 25இற்கும் மேற்பட்டவர்கள் இத் தம்பதியினர் மீது இனவாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட பின் இவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றுள்ளது. அக் கும்பல் அவர்களை ஆஸ்திரேலியாவை விட்டு உடனே வெளியேறுமாறு எச்சரித்தபடி இத் தாக்குதலை நடத்தியுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் 19 ஆண்டுகளுக்கு முன்  குடியேறிவிட்ட இத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  உடனே நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கொல்வோம் என்று அக் கும்பல் மிரட்டியதாகவும சகஸ்ரநாமம் கூறியுள்ளார். பலமுறை தொலைபேசியில்  போலீசாரை தொடர்பு கொண்டும் கூட அவர்கள் உடனடியாக உதவிக்கு வரவில்லை என்று ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

read more...

தடுப்புகாவலில் உள்ள தமிழ் பெண்களை சிறீலங்கா இராணுவம் கடுமையாக துன்புறுத்துகின்றது!


சிறீலங்கா இராணுவம், வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை  கடுமையாக துன்புறுத்துவதாக வவுனியா தகவல்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக பெண் இராணுவத்தினரே அதிக துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் தம்மால் காத்திரமான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியும். என்று பொதுஅமைப்புக்களை சேர்ந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்புக்காவலில் உள்ள பெருமளவான பெண்கள் அண்மையில் செட்டிக்குளம் முகாம் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வேறு வலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
அவர்களை பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்களுக்கும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு கொண்டு செல்லப்படுபவர்கள் இரு தொகுதி உடைகளையே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. படையினர் அவர்களை பூசா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்போவதாகவும்  மிரட்டி வருகின்றனர்.
read more...

Tuesday, 2 March 2010

தமிழில் மீண்டும் அசின்...



ஏறத்தாள இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு அசின் மீண்டும் தமிழில் பிஸியாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 
விஜயின் புதிய தமிழ்ப்படம் ( எப்போதும் போல மலையாளப் படமொன்றின் மீள்தயாரிப்பு ), ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படம், ஜெயம் ராஜா இயக்கும் படம் மற்றும் சிம்புவின் வாலிபன் ஆகிய படங்களில் அசின் நடிக்க இருப்பதாக அறியக் கிடைக்கிறது..
அசின் தமிழில் முன்ணணி நடிகையாக இருந்தபோது கஜினி படத்தின் இந்தி மீள்தயாரிப்பு மூலம் இந்தி திரையுலகில் நுழைந்து அங்கும் முன்ணணி நடிகையானார்.
கடைசியாக வந்த சல்மான் கானுடன் நடித்த  “லண்டன் டிரீம்ஸ்” வெற்றி பெறாததால் அசின் மீளவும் தமிழ் திரையுலகு புகுகிறார்
வாங்க அம்மணி.....வலதுகால் வைத்து வாங்க!
read more...

ஸ்ருதிஹாசன் நடிகர் சித்தார்த்தை காதலிக்கிறாரா?


கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.  பாய்ஸ் என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் சித்தார்த்  ஏற்கெனவே திருமணமானவர். இருவரும் இணைந்து தெலுங்குப் படமொன்றில் நடிக்கவிருபதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதைவிட, ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக புக் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன!
இல்லாமல் புகையாது. அள்ளாமல் குறையாது!
read more...

சிம்பு இன்னும் காதலில் விழவில்லையாம்!!

தான் திரிஷாவை காதலிப்பதாக வந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று சிம்பு தெரிவித்திருக்கிறார். தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தன் தொழிலையே காதலிக்கிறேன் , தனக்கு ஒரு சாதாரணமான பெண் போதும் என்றார் அவர்.
சிம்புவும் நயந்தாராவும் காதலில் விழுந்து பிறகு பிரச்சனையில் பிரிந்து கொண்டார்கள். இப்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவோடு சிம்பு நெருக்கமாக நடித்திருப்பதை தொடர்ந்ததே இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகின.
சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கிறது!!


http://www.tamillook.com/display.aspx?id=8ef11672-57ec-4b9d-a143-5a3d66095de8
read more...